tamilnadu

img

தமிழர்களை இழிவுபடுத்திய பாஜக வேட்பாளர் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை, மார்ச் 23- வடமாநில மக்களின்  வாக்கு களை பெறுவதற்காக தமிழர்களை இழிவு படுத்தி பேசிய பாஜக வேட்பாளருக்கு எதிராக கண்ட னங்கள் குவிந்து வருகிறது. பாஜகவில் மத்திய சென்னை வேட்பாளராக வினோஜ் பி.செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக நின்று படுதோல்வி அடைந்தார். மீண்டும் பாஜ மேலிடம், மத்திய  சென்னை தொகுதியில் வேட்பாள ராக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில்,  கடந்த வியாழக் கிழமை  இரவு வினோத் பி.செல்வம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேஎல்பி அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகை தந்தார். அங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்க ளுடன் வினோஜ் பி.செல்வம் பேச அடுக்குமாடி குடியிருப்பு நல சங்க செயலாளர் ஏற்பாடு செய்திருந்தார். இங்கு வசிக்கும் அனைவரும் சென்னை சவுகார்பேட்டையில் சொந்தமாக தொழில் செய்து வரு கின்றனர். புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி புளியந் தோப்பு பகுதிக்கு வந்துவிட்ட போதி லும் பெரும்பாலானோர் ஓட்டு மத்திய சென்னை தொகுதியான துறை முகத்தில் உள்ளது.

இதனால் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெறுவதற்காக வினோஜ்  பி.செல்வம் சென்றார்.  அந்த மக்கள் மத்தியில் பேசிய  அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில்தான் குறை வாக ஓட்டு சதவீதம் உள்ளது. 14 லட்சம் ஓட்டுகள் இருந்தும் வாக்கா ளர்கள் முறையாக ஓட்டுச் சாவடி களுக்கு சென்று ஓட்டு போடுவ தில்லை. குறிப்பாக, தேர்தல் என்றால் உங்களை போன்றவர்கள் (வட மாநில நபர்கள்) வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் லீவு என நினைத்து ‘வெக்கேஷன்’ கிளம்பி விடுகின்றனர்.

ஆனால், இங்குள்ள நபர்கள் (தமிழர்கள்) 500 ரூபாய் வாங்கி கொண்டு நேராக ஓட்டு சாவ டிக்கு சென்று சரியாக ஓட்டு போடு கின்றனர். இதனால்தான் தொடர்ந்து ஒரு சிலர் வெற்றி பெற்று வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொருவரும் (வட மாநில நபர்கள்) ஓட்டு சாவடிக்கு செல்லவேண்டும். ஓட்டு சாவடிக்கு சென்று விட்டால் கண்டிப்பாக பாஜ வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். எனவே, ஒவ்வொருவரும் தேர்த லுக்கு முந்தையநாள் செல்போனில் குறைந்தபட்சம் 20 பேருக்காவது போன் செய்து ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடுங்கள் என கூற வேண்டும்.

இதன் மூலம் நாம் எளிதில் வென்றுவிடலாம். இதனை அனை வரும் செய்யவேண்டும். அனை வரையும் தனித்தனியாக சந்தித்து ஓட்டு போடுங்கள் என கூற முடி யாது. மோடிஜி ஒரே மாதத்தில் 8  முறை தமிழ்நாட்டுக்கு வந்துள் ளார். அதை நீங்கள் மறந்து விடக் கூடாது” என பேசியுள்ளார். இரவு 9 மணிக்கு தொடங்கி 10 மணியை தாண்டி இந்த சந்திப்பு நடந்துள் ளது. இந்நிலையில் வினோஜ் பி.செல்வம் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வட மாநில நபர்களிடம் தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர்.  இந்நிலையில், திமுகவின் 72வது வார்டு மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சரவணன் நேற்று குறிப்பிட்ட இந்த வீடியோ ஆதாரங்களை திருவிக நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி மகாலட்சுமியிடம் புகாராக கொடுத்துள்ளார். புகாரை பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கண்ட புகாரை புளியந்தோப்பு உதவி ஆணையர் ராஜாவுக்கு மாற்றி இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கூறியுள்ளார்.