சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 2019-2020ஆம் ஆண்டு போனஸ் வழங்குவது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் 2 கோடியே 95 லட்சத்து 98 ஆயிரத்து 101 மின் நுகர்வோர்களும் 3 லட்சத்து 09 ஆயிரத்து 468-க்கும் மேற்பட்ட மின் மாற்றி களும் 1,690- க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்களை உள்ள டக்கிய மின்வாரியமாக உயர்ந்து நிற்கின்றது. உபயோகிக்கும் மின்சாரத்திற்கு உண்டான மின் கட்டணத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் வசூல் செய்யும் மின்சார வாரியமாக செயல்பட்டு வருகிறது.
தமிழக மின்வாரியத்தில் அனு மதிக்கப்பட்ட பதவிகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் காலிப் பணியிடங்களாகவே உள்ளன. இதனால் மின்வாரியத்திற்கு மாதத்திற்கு சுமார் ரூ.62 கோடி செலவினத்தில் மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் மின் உற்பத்தி மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை உயர்வும் அவர்களின் சேவை உத்தரவாதப் படுத்துவதற்கு செலவு செய்யும் தொகை கூடுதலான போதி லும் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கும் போனஸ் கடந்த பல ஆண்டுகளாக 20 சதவீதமாகவே உள்ளது என்பது நியாய மில்லை.மேலே சொல்லப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மின் ஊழியர்களின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து 2019 -2020 ஆம் ஆண்டுக்கு கீழ்க்கண்ட வகையில் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
கோரிக்கைகள்
வாரிய ஊழியர்கள் அலுவ லர்கள் பொறியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பகுதிநேர ஊழி யர்களுக்கும் போனஸ் மற்றும் கருணைத் தொகை 30 சதவீதம் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் 30 சதவீதம் கருணைத் தொகையை வழங்க வேண்டும். மின் வாரி யத்தில் பணியாற்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு உட்படாத அனைத்து பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல 30 சதவீதம் போனஸ் கரு ணைத் தொகை வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு 9 தொழிலாளர்கள் மட்டுமே ஒப்பந்த தொழிலாளிகளாக உள்ளதாக அறிவித்து அவர்களுக்கு கருணை தொகை என்று வழங்கியது நியாயமல்ல என்பதை குறிப்பிட்டு இந்த ஆண்டு அனல் புனல் உற்பத்தி பொது கட்டுமான வட்டம் வினியோக வட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு 30 சதவீத போனஸ் கருணைத் தொகையை வழங்கிட வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கும் இக்காலகட்டத்தில் மேற்கூறிய அம்சங்களை ஆராய்ந்தும் எங்களது கோரிக்கையை கவனத்தில் கொண்டு சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் கூடுதல் போனஸ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.