tamilnadu

img

நீட் ஆள்மாறாட்ட புகார்: தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விசாரணைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜுவிடம்சி.பி.சி.ஐ.டி., இன்று விசாரணை நடத்தினர்.
வாணியம்பாடி மருத்துவர் முகமது சபி மகன் இர்பான் 'நீட்' ஆள்மாறாட்டம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்தார்.  மருத்துவர் முகமது சபி சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு தேனி கொண்டு வரப்பட்டார். போலீஸ் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகன் தலைமறைவாக இருப்பதாலும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில் அவர் சேர்க்கை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாலும் ஆஜர்படுத்தவில்லை. இந்நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜுக்கு நேற்று  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாச ராஜுவிடம் தேனியில்  சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.