சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவரை தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த செல்வ சேகர் என்பவரது மகன் மகன் ஜெகதீஸ்வரன் (19). இவர் சி.பி.எஸ்.சி படத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்து, கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் இரு முறையும் நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கான பணம் கட்டி படித்து வந்த அவர், இந்த முறை 400 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ஆனால் போதிய மதிப்பெண் இல்லாததால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. அதே சமயம் தனியார் கல்லூரியில் சேரவும் லட்சக்கணக்கில் பணம் இல்லாததால், ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத தந்தை செல்வ சேகரும், இன்று அதிகாலை வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.