tamilnadu

img

நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் !

சென்னை, டிச. 22 - வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி வெள்ளியன்று (டிச.22) நாடு முழுவதும் இந்தியன் வங்கி ஊழி யர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி 12 மையங்க ளில் முழுநாள் தர்ணா நடைபெற்றது. இந்தியன் வங்கி ஊழியர் சம்மேள னம் இந்த போராட்டத்தை நடத்தி யது.

இதன் ஒரு பகுதியாக சென்னை யில் களப் பொது மேலாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியாளர்களி டம் சம்மேளனத்தின் மாநிலச் செய லாளர் சுனில் குமார் கூறியதாவது:

அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுத்துறை வங்கி வழியாக செயல்படுத்தப்படுவதால், வேலைப்பளு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆட்குறைப்பையும் செய்வதோடு, காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர். இந்தியன் வங்கியில் ஏராளமான காலிப்பணி யிடங்கள் உள்ளதால் ஆர்பிஐ நிர்ணயி த்துள்ள நேரத்தில் வாடிக்கையா ளர்களுக்கு சேவைகளை வழங்க முடியவில்லை. தொழிலாளர் சட்டங் களை வரம்பு மீறி நிர்வாகம் ஊழி யர்களை துன்புறுத்தி வேலை வாங்கும் நிலை உள்ளது.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத்  வங்கியை இணைத்து 4 வருடங்க ளாகியும், மாற்றல் கொள்கையை இறுதி செய்யாமல் உள்ளனர். இந்தியன் வங்கியின் பொதுத்துறை தன்மையை மாற்றி தனியாருக்கு கொண்டு செல்ல நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க முடிவு எடுத்துள்ளது. இதற் காக, இந்தியன் வங்கி சார்பில் புதிதாக ஒரு துணை நிறுவனத்தை துவக்கி உள்ளனர். அதை கடுமையாக எதிர்க்கிறோம்.

வேலைநிறுத்தம்

3 ஆயிரம் எழுத்தர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், கடைநிலை ஊழி யர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் திட்டத்தை கைவிட வேண்டும், தனியார்மய நடவடிக்கை களை கைவிட வேண்டும் என வலி யுறுத்தி இந்த போராட்டம் நடை பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜனவரி மாதம் தலைமை அலுவல கம் முன்பு போராட்டம் நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த  போராட்டத்திற்கு  சம்மேளன தலைவர் பலவேந்திர தாஸ்  தலைமை தாங்கினார். பெபி மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், முன்னாள் அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டு சகோதர சங்கத் தலைவர்கள் பேசினர்.