சென்னை:
புதிதாக அச்சடித்து வழங்கப்பட்டுள்ள ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நாட்டுப்பண் எழுத்துப் பிழைகளுடன் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலுமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் 1-ஆம் வகுப்பு மற்றும் 2-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள ஜன கண மன என தொடங்கும் நாட்டுப்பண்ணில் பல வார்த்தைகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளன.
திராவிட உத்கல வங்கா என்ற வரியில் வங்கா என்பதற்கு பதில் பங்கா என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோன்று உச்சல ஜலதி தரங்கா என்ற வரியில் ஜலதி என்பதற்கு பதில் சலதிஎன அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஜன கண மங்கள தாயக ஜெயகே என்ற வரிக்குப் பதில் பாடலின் முதல் வரியான ஜனகண மன அதிநாயக ஜய ஹே என்பதே இடம்பெற்றுள்ளது.