“இந்த மண்ணுக்கு துரோகம் செய்பவர்கள், தமிழகத்தை அழிக்க நினைப்பவர்கள் சர்வ நாசம் ஆவார்கள். படர்தாமரை உடலுக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பாஜக தாமரை தேசத்திற்கு நாசம். நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய தேர்தல் தான் இது. தமிழகத்தின் சமூக நீதியை பாதுகாக்க, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.