செங்கல்பட்டு,பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி கிராமத்தில் மூங்கில் அம்மன் கோயில் அரு கில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார் கள். இந்த மக்களின் குடிசைகள் செங்கல் gட்டு புறவழிச்சாலை மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் மது அருந்துவோர், சமூக விரோதிகளின் கூடாறமாக மாறிவிட்டது. கடந்த சில வாரங்களாக இரவு நேரங்க ளில் மர்ம நபர்கள் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிவருவதாகக் கூறப் படுகின்றது. கடந்த மாதம் 6 ஆம் தேதி யன்று மது அருந்துபவர்களை தட்டிக் கேட்ட இருளர் குடியிருப்பைச் சார்ந்த சங்கரின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் படுகாய மடைந்த சங்கர் செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி இருளர் மக்கள் காவல் துணை கண்காணிப்பா ளரிடம் புகார் மனுவும் கொடுத்துள்ளனர். மீண்டும், மர்ம நபர்கள் நடமாட்டம் அதிக ரித்துள்ளது. காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது தப்பித்துவிடும் மர்ம நபர்கள் அருகில் இருக்கும் மலைப் பகுதியில் பதுங்கி விடுகிறார்கள். பிறகு, இருளர் மக்களின் வீடு களில் புகுந்து அட்டூழியம் செய்துவருகின்ற னர். மேலும், இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் பெண்களை தாக்குவது, இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் கற்களை வீசுவதும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் கொடுத்த புகாரில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எங்களது குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகின்றனர். இரவுநேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இப் பிரச்சனையில் மாவட்ட கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.