தேஜஸ் விரைவு ரயிலை தனியாரிடம் வழங்கியதைக் கண்டித்தும், யார்டுகளிலும், பணிமனையிலும் பாதி இடங்களை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், பொறியியல் ஊழியர்களுக்கு உயிர்காக்கும் கருவியான ரக்ஷக் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என் டிஆர்இயு சென்னை டிவிஷன் சார்பில் பொது மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பாபு தலைமை தாங்கினார். உதவி பொதுச் செயலாளர்கள் பேபி ஷகிலா, அரிலால், துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.