காளான் வளர்ப்பை வேளாண் தொழிலாக அங்கீகரித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகள் வளர்ப்பை வேளாண் தொழிலாக அங்கீகரித்து தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.