tamilnadu

img

கல்வியைக் காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்விசிக எம்.பி. ரவிக்குமார் அதிர்ச்சி

சென்னை, ஆக. 26 - தமிழக இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் பழனியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெற்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

அதன்பிறகு மாநாட்டு கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர. சக்கரபாணி, பி.கே. சேகர்பாபு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக ஆதீனங்கள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மாநாட்டை காண தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்த னர். அதேபோல் மலேசியா, சிங்கப் பூர், இலங்கை உட்பட வெளி நாட்டு பங்கேற்பா ளர்கள் 400-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

மாநாட்டின் 2-வது நாளில் மொத்தம் 21 தீர் மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்நிலையில், கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் 5வது தீர்மான மாக, “முருக பக்தி இலக்கியங் களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்; 8வது தீர்மானத்தில், விழாக் காலங்களில் முருகன் திருக்கோவில்களில் மாண வர்களைக் கொண்டு கந்த சஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 12வது தீர்மான மாக, முருகப்பெருமானின் பெரு மைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரி களில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவு களை ஏற்படுத்த அரசுக்கு பரிந்து ரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படு கிறது, எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வியை சமயச் சார்புடைய தாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

இந்து சமய அறநிலையத்துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமய த்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரச மைப்புச் சட்ட நெறிக்கு எதிரான தாகும். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள் ளார்.