ரூ.68 கோடி பற்றாக்குறையுடன் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை புதனன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்டது. வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழுத் தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 2025-2026ஆம் ஆண்டு வருவாய் வரவு 5 ஆயிரத்து 145 கோடியே 52 லட்சம் ரூபாயக வும், வருவாய் செலவினம் 5 ஆயிரத்து 214 கோடியே 9 லட்சம் ரூபாயாகவும் இருக்கும். பற்றாக்குறை 68.57 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள் ளது. மூலதன வரவு 3 ஆயிரத்து 121 கோடியே 65 லட்சம் ரூபாயாகவும், மூலதனச் செலவு 3 ஆயிரத்து 190 கோடியே 61 லட்சம் ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள் ளது. சொத்துவரியாக 2 ஆயிரத்து 20 கோடி ரூபாய், தொழில் வரியாக 600 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரியாக 400 கோடி ரூபாய், மாநில நிதிக்குழு மானியம் ஆயிரத்து 150 கோடி ரூபாய், இதர வருவாய் 919 கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பிற செல வினங்கள் 2ஆயிரத்து 232 கோடி ரூபாயா கவும், நிர்வாகச் செலவினம் 297 கோடி ரூபாயும், பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு என்ற வகையில் ஆயிரத்து 864 கோடி ரூபா யும், கடனுக்கான வட்டியாக 67.65 கோடி ரூபாய் வருவாய் செலவீனமாக இருக்கும். மூலதன செலவு என்ற வகையில், பேருந்து சாலைகள் அமைக் ரூ.628 கோடி யும், மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க ரூ.1032 கோடியும், பாலங்கள் அமைக்க 164 கோடி ரூபாயும், கட்டிட பணிகளுக்காக 413 கோடி ரூபாயும், சிறப்பு திட்டங்களுக்கு 179 கோடி ரூபாயும், இதர பணிகளுக்கு 279 கோடி ரூபாயும், மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை துறைக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 264 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.