சென்னை, அக்.9- பொதுமக்களின் வசதிக்காக நம்ம சென்னை செயலியில் மாநகராட்சி அலு வலர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படு த்தப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பழமையான மாநகராட்சி களில் சென்னையும் ஒன்றா கும். தற்போது சென்னையில் 200 வார்டுகளும் 12 லட்சத்திற்கு மேற்பட்ட வீடு களும் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மன்றத்துறை, வருவாய் மற்றும் நிதி, கல்வி, சுகாதா ரம், பொதுத்துறை, நிலம் மற்றும் உடமைத்துறை, இந்திய பொறியியல், மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை, கட்டிடம், சுகா தாரம், மழைநீர் வடிகால், சிறப்பு திட்டங்கள், பேருந்து சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை கள் செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் ஆயிரக்கண க்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பணிகள் துறை யில் மாநகராட்சி தலைமைய கத்தில் உள்ள பல்வேறு பொறியியல் பிரிவில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பெறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகிறனர். இதை தவிர்த்து 15 மண்ட லங்களிலும் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆணை யர் தொடங்கி சென்னை மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் உயர் அதிகாரி களின் தொலைபேசி எண்கள் மட்டுமே சென்னை மாநக ராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஒரு பிரச்சனை என்றால் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரி விக்கின்றனர். இந்நிலையில் பொது மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க அந்த பகுதியின் அலுவலர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக ‘நம்ம சென்னை செயலியில்’ அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் தொலைபேசி எண்ணை பதிவேற்றம் செய்ய சென்னை மாநக ராட்சி முடிவு செய்துள்ளது.