விழுப்புரம், நவ.20- விழுப்புரம் அருகே முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக (டீன்) பணிபுரிந்து வந்த கோ.சங்கரநாராயணன் கடந்த மாதம் பணி ஓய்வு பெற் றார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை தலைவராக பணிபுரிந்து வந்த குந்தவிதேவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நிய மிக்கப்பட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற குந்தவி தேவி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஏற்கெனவே பணியாற்றி யுள்ளேன். இந்த மருத்துவமனைக்கு, குறிப்பாக, மகப்பேறு பிரிவுக்கு அதிகமா னோர் வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்கு புதிதாக தொடங்கப்பட்ட விபத்து-அவசர சிகிச்சைப் பிரிவு மையத்தில், சிறந்த மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, படுக்கை வசதியில்லாத நிலை ஏற்படுகிறது. இதற்காக, புற நோயாளிகள் பிரிவு, பழைய மகப்பேறு மருத்துவப் பிரிவின் மேல் தளங்களில் கூடுதலாக இரு கட்டடங்கள் கட்டி, படுக்கை வசதி ஏற்படுத்த அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குநர கத்துக்கும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வரின் மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து நோய்களுக்கும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படு கின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் தரம் உயர்த்தப்பட்டு சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களைப் போல, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் குந்தவிதேவிக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலர் கதிர், நிர்வாக அலுவலர்கள் ஆனந்தஜோதி, சிங்காரம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.