tamilnadu

img

பட்டா கேட்டு 85 வருடமாக போராடும் மலை மக்கள்

ஆம்பூர், மார்ச் 6-  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை முத்தனூர் கிராமத்தில் 85 வரு டங்களாக வசித்து வரும்  மலைவாழ் மக்களின் குடிசை களுக்கும் அனுபவத்தில் பயிர் செய்து வரும்  நிலத்திற்கும் பட்டா வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு தலைமையில் சங்கத் தலைவர்கள் திருப்  பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஏலகிரி மலையில்  மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களின் எண்ணிக்கை 14. இதில் முத்தனூர் கிராமத்தில் இந்து மலையாளி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரு கிறார்கள். பாட்டன் காலத்திலிருந்தே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்த ஒரு கிரா மத்தில் மட்டும் சர்வே எண்: 114/1 பரப்பில் சுமார் 40 குடிசைகள் அமைத்து 200க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு நபர்,  இது என்னுடைய நிலம் என்று இந்த மக்களை மிரட்டி வருகிறார். கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியிலிருந்து குண்டர்களை அழைத்து வந்து கத்திகள் போன்ற கொலை ஆயுதங்களோடு  மிரட்டி வருகிறார்கள்.

இத னால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகி யுள்ளது. அந்த மக்களின் வீடுகளை இடிப்பதற்கு பொக்லைன் இயந்திரங் களை கொண்டு வந்து மிரட்டுகிறார்கள்.  இந்த கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மின்சாரம்,  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தெருக்க ளுக்கு குடிநீர் இணைப்பு வசதிகளையும் அரசு செய்து  கொடுத்துள்ளது. இங்கு வசித்து வரும் மக்களின் அனுபவத்தில் இருக்கும் நிலங்களுக்கு பட்டா வழங்க  வேண்டி பலமுறை மனு கொடுத்து உள்ளனர். வனத்துறையும் இந்த மக்களை மிரட்டுவது, அடிப்பது, உதைப்பது போன்ற சம்பவங்கள் ஈடுபட்டு  வருகிறது. எனவே தமிழ்நாடு அரசின் வரு வாய்த்துறை அரசாணை எண் 318 இன்படி, இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையை பரிசீலித்து குடிசைகளுக்கும் அனுபவ விவசாய நிலத்திற்கும் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர். ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் மாவட்ட  வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவரை யும் சந்தித்து மனு அளித்தனர். மனுவைபெற்றுக் கெண்ட ஆட்சியர் பரிசீலிப்பதாக தெரிவித்தார். மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி. சக்திவேல், சங்கத் தலை வர்கள் சண்முகம், லஷ்மண ராஜா, கேசவன், ஜெய ராமன், ஜெயன், காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.