தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா திங்களன்று நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மாதேஸ்வரி தலைமையில் வீரம்மாள் கொடியேற்றினார். ஊனாத்திபுதூர் கிளையில் என்.கலாமணி தலைமையில், நாச்சாயம்மாள் கொடியேற்றினார். அந்தியூரில் வார்டு கவுன்சிலர் எஸ்.கீதா தலைமையில் கொடியேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் பி.லலிதா சிறப்புரையாற்றினார்.