tamilnadu

img

சோவல், டாங்சன் தொழிற்சாலை

சோவல், டாங்சன் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகக் கதவடைப்பு செய்ததால் வேலை இழந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஹவாசின் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், பொருளாளர் ஜி.வசந்தா, மாவட்ட துணைச் செயலாளர் க.பகத்சிங்தாஸ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.