tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் செய்தி வெளிவந்தாலும் கொரோனா பாதிப்பு வேகம் உச்சத்தில் தான் உள்ளது. குறிப்பாக சென்னை பகுதி கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதியிலும் கொரோனா பரவல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத பாதிப்பு 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 37 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த  உயிரிழப்பு எண்ணிக்கை 800-யை (794 பேர் ) நெருங்குகிறது. தமிழகம் முழுவதும் 1,358 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில்,  இதுவரை மொத்தம் 34 ஆயிரத்து 112 பேர் குணமடைந்துள்ளனர். வழக்கம் போல அதிகபட்சமாக சென்னையில் 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 22 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளது.

;