குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக் கொல்லும் ஒன்றிய அரசை கண்டித்து வெள்ளியன்று (பிப்.23) சென்னை பல்லவன் இல்லம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கி.நடராசன் (தொமுச), கே.சி.கோபிகுமார் (சிஐடியு), எம்.ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜாஸ்ரீதர் (எச்எம்எஸ்), சேவியர் (ஐஎன்டியுசி) உள்ளிட்டு ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.