ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், திங்களன்று பாலி யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, “காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வாரிசு அரசியல், முறைகேடு செய்வ தில் மட்டும் கவனம் செலுத்துகின்றன” எனக் கூறினார். இந்த பேச்சால் சமூக வலைத் தளங்களில் மோடி வறுபட்டு வருகிறார். காரணம் சமீபத்தில் கர்நாடகா பாஜக தலைவராக விஜ யேந்திரா நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடக முன் னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் ஆவார். மோடியின் பாஜக மட்டும் வாரிசாக ஒரு தலைவரை நியமிக்க லாம். ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் மகன் வாரி சாக இந்திய கிரிக்கெட்டை ஆளலாம். ஆனால் எதிர்க்கட்சிகளில் வாரிசு அரசியல் இருந்தால், அதை மட்டும் மோடி பிரச்சாரமாகவும், குற்றச் சாட்டாகவும் பேசலாமா என சமூக வலைத்தளங் களில் நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர்.