tamilnadu

img

நவீன முறையில் பப்பாளி தோட்டம்: அசத்தும் விவசாயி

கொரோனா வைரஸ் உல கம் முழுவதும் ஆட்டிப்  படைக்கும் நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே நவீன முறையில் உயரக் குறைவான பப்பாளி பயி ரிட்டு கூடுதலான மகசூலை பெற்று  வருகிறார் ஒரு விவசாயி.  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் விநாயகமூர்த்தி. நடுத்தர விவசாயியான இவர் சுமார்  ஐந்து ஏக்கர் பரப்பளவில் பப்பாளி பயிரிட்டுள்ளார். பொதுவாக நாட்டு  பப்பாளி மரம் 2 ஆள் உயரத்திற்கு  மேல் இருக்கும். வலுவற்றதாக மரம்  இருக்கும் நிலையில் உயரத்தில் இருக்கும் பப்பாளியை பறித்து எடுப்  பது கடினமாக இருக்கும். ஆனால் விநாயகமூர்த்தி பயி ரிட்டுள்ள பப்பாளி மரத்தின் உயரமே  5 அடிதான் உள்ளது. நின்றபடியே சிறுவர்கள்கூட இதனுடைய பழத்தை பறிக்கக்கூடிய அளவில்  ஒவ்வொரு மரத்திலும் ஏராளமான காய்கள் காய்த்து உள்ளன. இது குறித்து அவரிடம் கேட்டபோது “ஆடி மாதத்திற்கு மேல் இதனை  பயிரிட்டால் 8 மாதத்தில் அறு வடைக்கு தயாராகிறது. 15 நாட்க ளுக்கு ஒரு முறை அறுவடை செய்ய  முடிகிறது.

இந்த பப்பாளி தற்போது  ஒரு கிலோ ஐந்து ரூபாய் முதல் ஏழு  ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் இதற்கு காற்று வலுவாக  அடிக்கக்கூடாது. ஒரு இடத்தில் பயிரிட்ட பின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு இதே பப்பாளியை பயி ரிடக் கூடாது. ஏனென்றால் வைரஸ்  பாதிக்கும். சுற்றுப்புற நிலங்களை விட மேடான பகுதியில் இதனை பயி ரிடுவது நல்லது. தண்ணீர் ஈரம் இருக்க வேண்டுமே தவிர தேங்கக்  கூடாது,  ஒரு ஏக்கர் பயிரிட ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவாகும். ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் நட  முடியும் என்றும், இதில் 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுமார் மூன்று டன்  அளவிற்கு (3,000 கிலோ) மகசூல் கிடைக்கும் என்றும் கூறுகிறார்.  மாதத்திற்கு 2 முறை அறுவடை  என்றால்கூட வருடத்திற்கு சுமார் 3  லட்ச ரூபாய் அளவிற்கு மகசூல்  கிடைக்கிறது. மேலும் இதனை ஊடு பயிராக பயிரிட்டு இருப்பதாகக் கூறி  ஆச்சரியப்படுத்துகிறார். முதலில் கொய்யா கன்று நட்டு பின்னர் மணிலா போட்டு இதனிடையே ஊடு பயிராக பப்பாளி கன்றை பயிரிட்ட தாகக் கூறுகிறார்.

சொட்டுநீர் பாசன முறை யையே இதற்கு பயன்படுத்துகிறார்.  மேலும் அரசின் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் ஆண்டுதோறும் நடைபெறும்  கண்காட்சிகளுக்கும் இவர் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. காய்களில் மூன்று பட்டைகள் உருவானவுடன் இதனை பறித்து  செய்தித்தாள்களில் தனித்தனியாக சுருட்டி வைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சென்னை, பெங் களூரு, புதுச்சேரி என வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சிலநேரம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பொதுவாக தம் பகுதியில் பிற  விவசாயிகள் வழக்கமாக பயிரிடும்  பயிர்களைவிட புதிய முறையில் புதிய ரக பயிர்களை பயிரிடுவதில் தான் தனக்கு ஆர்வம் என்றும், அதேபோல் நாட்டு பப்பாளி பழத்  தின் மருத்துவ குணங்கள் பெரும்பா லும் இதிலும் உள்ளது என்றும் கூறுகிறார் விநாயகமூர்த்தி. தொடர்புக்கு - வினாயகமூர்த்தி செல்-8489213156 -வி.சாமிநாதன்