சென்னை:
“தொகுதி மேம்பாட்டு நிதியில், 2 கோடி ரூபாயை, எவ்வித நிபந்தனையுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் விரும் பும் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும்,’’ என, எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடந்து, புதிய எம்.எல்.ஏ.,க் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய் யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியை, அவர்கள் செலவழிக்கவில்லை. அதை, புதிய எம்.எல்.ஏ.,க்களிடம் வழங்கவேண்டும்.தொகுதி மேம்பாட்டு நிதியில், எம்.எல்.ஏ.,க்களுக்கு, 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 1 கோடி ரூபாய், கொரோனா தடுப்பு பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மீதி, 2 கோடி ரூபாயில், மாவட்ட ஆட்சியர் 25 லட்சம் ரூபாயை, அவர் கூறும் பணிக்கு ஒதுக்கும்படி கூறுகிறார். மீதமுள்ள பணத்தை செலவழிப்பதற்கும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.தேர்தல் நெருங்குகிறது. எனவே, கொரோனா தடுப்பு பணிக்கு போக, மீதமுள்ள, 2 கோடி ரூபாயை, எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் பணிக்கு செலவழிக்க, அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.இதற்கு பதில் அளித்த முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தார்.