tamilnadu

img

பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு ? 2 பேர் உயிரிழப்பு: 22 பேருக்கு சிகிச்சை

சென்னை, டிச. 5 - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த தில் உடல்நலன் பாதிக்கப்பட்டு 2 பேர்  உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பல்லாவரம் காமராஜ் நகர் கண்டோன் மென்ட், 6வது வார்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மலைமேடு பகுதிகளில் குடிநீர் குழாயில் வந்த குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் குரோம்பேட்டை மருத்துவ மனையில் 33 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், கற்பகம் (வயது 75) என்பவரது உடல்நிலை  மோசமான தையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.

பார்த்திபன் (37), பவித்ரா (35) ஆகிய இருவரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில்  18 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், திருவீதி (56), மோகனரங் கம் (42) ஆகிய இருவரும் குரோம் பேட்டை மருத்துவமனைக்கு வரும் வழி யிலேயே உயிரிழந்தனர்.

கன்டோன் மெண்ட் பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வரலட்சுமி (88) வயது மூப்பு காரணமாக டிச.4 அன்று இறந்தார். இவரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து குடித்ததில் இறந்ததாக தகவல் பரவியது. இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறு வோரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்  ஆகி யோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரி த்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், குரோம்பேட்டை மருத்துவமனையில் வயிற்றுப்போக்குடன்தான் அனுமதிக் கப்பட்டுள்ளனர். குடிநீரால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. மணல்மேடு பகுதியில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே குடிநீரின் மாதிரியை கிண்டி கிங் நோய்த்தடுப்பு நிலையத்தில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ள குடி யிருப்பு பகுதிகளில் 6 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இருவரின் உயிரிழப்பு குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். விநியோகிக் கப்பட்ட குடிநீரை இனிமேல் பருகாத வாறு தடை விதிக்கப்பட்டு, வாகனங்க ளின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ப்படுகிறது என்றார்.

நிவாரணத்தை உயர்த்தி வழங்க சிபிஎம் கோரிக்கை 

“கழிவுநீர் கலந்த குடிநீர் பல நாட்களாக வருகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால்தான் பாதிக்கப்பட்டதாகவும், உயிரிழப்பு நிகழ்ந்த தாகவும் மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒளிவுமறைவின்றி அனைத்தையும் வெளிப்படையாக அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் தர வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை மறுக்கட்டமைப்பு செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை மழைநீர்க் கால்வாய், பாதாள சாக்கடைகளில் நேரடியாக விடுவதை தடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி டிச.6 அன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளார்.