சென்னை,பிப்.16- தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டுள்ளன. இத்தகைய தவறான செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை.
அதற்கான சிறப்பு வங்கிக்கணக்கையும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது மட்டுமின்றி உண்மைக்கும் புறம்பானது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திட்டமிட்டு களங்கப்படுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மறுப்பு செய்தி / திருத்தம் வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது; இல்லையேல் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் தலைமைக்குழு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழுவும் இதே மறுப்பை தெரிவித்துள் ளது. தேர்தல் பத்திரங்களை பெறக்கூடாது என்பதற்காகவே சம்பந்தப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் மார்க்சிஸ்ட் கட்சி கணக்கு கூட துவக்கவில்லை என்று அரசியல் தலைமைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.