சென்னை, ஜூலை 18 - இந்தியன் - 2 திரைப்படத்தில் இ - சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மைய தொழிலாளர்களை இழிவாக, ஊழல்வாதி களாக சித்தரித்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு தரவு உள்ளீட்டா ளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கே.சி.கோபி குமார், பொதுச் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்தியன்-2 திரைப்படத்தில் இ-சேவை மையத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை தாய் மசாஜ் செய்ய பாங்காங் சென்று வருவதாகவும், இதற்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாக வும் காட்சி வைத்துள்ளனர்.
ஆதார் அட்டை, சான்றுக்கு ரூ. 200, 300 கொடுத்தால்தான் தருவதாகவும், லஞ்சத் தொகையை டீக்கடையில் நின்று பெற்றுத்தர ஆட்கள் இருப்பதாகவும், இ-சேவை மைய ஊழியரை அரசு அதிகாரி போல சித்தரித்துள்ளனர். இது உண்மைக்கு புறம்பானது. மிக வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்த காட்சிப்படுத்தல் இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மைய தொழி லாளர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தின் கீழ் இ - சேவை மையம் உள்ளது. இ -சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மைய தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர் களாவர். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிக குறைவான ஊதியம் பெறுகின்றனர்.
இ - சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மைய தொழிலாளர்கள், பொதுமக்கள் தரக்கூடிய சான்றிதழ்கள், ஆவணங்கள் தரவுகளை உள்ளீடு செய்வது மட்டுமே ஆகும். அவற்றை வருவாய்த்துறை அதிகாரி கள், யுடய் (யுஐடிஏஐ) எனப்படும் ஒன்றிய அரசு நிறுவன அதிகாரிகள் பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள்.
இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் வரும் காட்சிகள்,தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசுக்கும் அவப் பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காட்சிகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தலையிட்டு நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.