tamilnadu

முஸ்லிம் மாணவி மீது வெறுப்பை உமிழ்ந்த ஆசிரியர்

சென்னை, நவ. 23- மத ரீதியாக முஸ்லிம் மாணவி மீது வெறுப்பை உமிழ்ந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு வலி யுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் முஸ்லிம் மாணவியை “மாட்டுக்கறி சாப்பிடுவதால் தான் திமிருடன் இருக்கிறாய்”என்று சொல்லி தாக்கியதோடு, அதே ஆசிரியர் பிற மாணவர்களின் காலடிகளை மாணவி யின் ஆடைகளை சுத்தம் செய்ய வைத்து மத ரீதியான வெறுப்பை வெளி ப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து புகார் அளித்தும், சம் பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பள்ளியின் தலைமை  ஆசிரியை, ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். கல்வி வளாகத்தில் ஆசிரியர் மாணவர் உறவில் இதுபோன்ற மத ரீதியான வெறுப்பு அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

வட மாநிலங்களில் நடப்பதை போல் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங் களை  இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஒத்த செயல்பாடாக இந்த நட வடிக்கை அமைந்துள்ளது.‘வேற்றுமையில் ஒற்றுமையை’உயர்த்திப் பிடிக்கும் நமது தேசத்தில், குறிப்பாக இதை வாழும் வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் இதுபோன்ற மத, சாதி ரீதியான வெறுப்புகளை முன் எடுப்பவர்களை கொடும் கரங்கள் கொண்டு அடக்க வேண்டுகிறோம்.

பள்ளி மாணவிக்கு ஏற்பட்டிருக்கிற இந்த கொடுமைகளுக்கு பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நிர்வாக ரீதியாகவும், காவல் துறை மூலமாகவும் தமிழ்நாடு அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.