சென்னை, ஜன.3 - ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலி யுறுத்தி போக்குவரத்து தொழி லாளர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு அழைத்து போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங் களுக்கு ஓர் அன்பான வேண்டு கோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழி லாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
அதிமுக தனது ஆட்சிக் காலத்தில் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல் தொழிலாளர்களை நிர்க தியாக நிற்க வைத்தது, எந்த கோரிக் கைகளை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. அதன்பிறகு, முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. கூடுதலாக போனஸ் மகளிர் கட்டணமில்லா பயணத் திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ. 2000 கோடியும் மாணவர் இலவச பேருந்து பயணத்திற்கான ரூ. 1500 கோடியும் ஒதுக்கீடு செய்தார் முதல்வர். அரசாணை 35-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் பிரச்சனை களுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் மூலம் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் நம் முதல்வர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்துக்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவ டிக்கை எடுத்துள்ளார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தீபாவளி போனஸ் அதிமுக ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப் பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 விழுக்காடு உயர்த்தி ரூ. 16,800 வழங்கியதால் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுகிறார். போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையில் பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது.
இப்போது சென்னையில் வரலாறு காணாத அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நம் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம்.
பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை இந்த இயற்கை பேரிடருக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலை யில், முதல்வர் நிவாரண தொகுப்பை அறிவித்து வழங்கி வருகிறார்.
முழு அரசு இயந்திரமும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதை அனை வரும் அறிவோம். பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பேருந்துகள் வழக்கம் போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதே போல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணை யாக நிற்க அன்போடு வேண்டுகிறேன். எனவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உணர்ந்துகொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள்,
ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை இந்த அரசு மேற்கொள் ளும். தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங் கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சனைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டியதாகவும் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.