மனித-வனவிலங்கு மோதலை தவிர்க்கும் நடவடிக்கைகள்: அமைச்சர் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, வேப்பன ஹள்ளி தொகுதிகளின் வனப் பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் புகாதவாறு இரும்பு வட முள்வேலி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் சிபிஐ உறுப்பினர் டி.ராமச்சந்திரன், அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் க. பொன்முடி,“ஓசூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி களில் யானைகள் காப்புக் காடுகள் விட்டு வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி களில் நுழைந்து சேதங்களை ஏற்படு வதையும், மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பை தவிர்க்கவும் வனத்துறை மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இரும்பு வட கம்பி வேலி, சூரிய சக்தியில் இயங்கும் இரும்பு வட கம்பி வேலி மற்றும் தொங்கும் வகையில் சூரிய மின் வேலி போன்ற நவீன வகையிலான தடுப்பு வேலிகள் நிறுவப்பட்டு, விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி களில் யானைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மீறி வன விலங்குகள் குடியிருப்பு பகுதி கள் மற்றும் விவசாய விளை நிலங்க ளுக்குள் புகுந்து விடுகிறது. ஓசூர் வனக்கோட்ப் பகுதியில் ஏற்கனவே, 35.20 கி.மீ நீளத்திற்கு இரும்பு வட கம்பிவட வேலியும், 18,20 கி.மீ நீளத்திற்கு தொடங்கு வகையில் சூரிய மின் வேலியும் அமைப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ரூ.3,50 கோடி செலவில் இரும்பு கம்பி வட வேலி அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. 7 கி.மீ நீளத்திற்கு தொங்கும் வகையில் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர என எல்லை ரோந்துக் குழுவினர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வனப் பணியாளர்கள் குழு ஆளில்லா விமானம் இயக்க முறையில் பயிற்சி யும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வனத்தை விட்டு வெளியேறும் வன விலங்குகளை கண்டறியும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளி யேறுவதை தடுக்கும் வகையில் வனப் பகுதிக்குள் தீவனம் தரக்கூடிய மரங்கள் நடவு செய்யப்படுகிறது. தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய மோட்டாருடன் இணைக்கப்பட்ட நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வரு கிறது. மேலும், மனித -வன உயிரின மோதல்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.