சென்னை, மார்ச் 1 - தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வெள்ளியன்று (மார்ச் 1) துவங்கி வைத்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர் சேர்க்கை யை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ், “அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மேலும், “தங்கள் பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப் பள்ளி களில், சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கொரோனா காலத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக ரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு பல்வேறு சலுகைகளும், உயர் கல்வியில் இட ஒதுக்கீடுகளும் வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அர சுப் பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கலாம்” என்று பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.