குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், கோஷியாரி கமிட்டி பரிந்துரைப்படி இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை இ.பி.எப் பென்ஷனர்கள் நலச்சங்கம் சார்பில் இபிஎப் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் வி.ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் நடராஜன், குணசேகரன், ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.