tamilnadu

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான் தேர்வு அறிவிப்பு

சென்னை, ஜூன் 26- 2019-ண் ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் (வயர்மேன் ஹெல்பர்)  தகுதிகாண் தேர்வு  நடைபெறவுள்ளது.  இது குறித்து தகுதி வாய்ந்த கண்பியாள் உதவியாளர்களிடமிருந்து இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்க ளிடமிருந்தும் தேசிய புணரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்த ப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரி¦ தொழிலில் 5  வருடங்களுக்குக் குறையா மல் செய்முறைஅனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல்வேண்டும அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்வுக்குரிய விண்ணப்பபடிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை, தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து ரூ.10 ரொக்கமாக செலுத்தி ஜூன் 28 ஆம் தேதி  முதல் பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை மாதம் 26 ஆம் தேதிக்குள்  தேர்வு மையங்களை தேர்வு செய்து அதற்கு அனுப்பவேண்டும் என்று  மாநில அரசின் செய்திக்குறி ப்பு தெரிவிக்கிறது.