சென்னை, டிச.18 - பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. முகமது அலி, மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் தின சரி சுமார் 28 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. கறவை மாடுகளுக்கான இடுபொருட் கள் பருத்தி கொட்டை, தவிடு, கலப்பு தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள சூழலில் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், மாட்டுத் தீவனம் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும், பால் 1 லிட்ட ருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஆரம்ப சங்க பணியாளர் களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. இதற்காக பலமுறை அமைச்சரையும் சந்தித்துள்ளோம்.
பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 கோரிய சூழலில், தமிழ்நாடு அரசு ரூ.3 ஊக்கத் தொகை அறிவித்துள் ளது. இதனை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. ஆனால் அதே சமயம் பாலுக்கான கொள்முதல் விலை, உயர்வு மானிய விலையில் தீவனம், ஆரம்ப சங்க பணியாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட இதர கோரிக் கைகள் குறித்து எந்தவித அறிவிப் பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதன் மூலம் ஆவினுக்கு கூடுதலான பால் கொள்முதல் வரவு ஏற்படும். இல்லை யெனில் கொள்முதல் குறைவு ஏற்பட்டு ஆவினுக்கு பாதகமான சூழல் ஏற்படும். இதன் பாதிப்பு காரணமாக பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் பொது மக்களின் உணவு பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு தலை யிட்டு பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட இதர கோரிக்கை களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.