அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும் புனேயில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு இடையே செவ்வாயன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலர் வெ.இறையன்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கொ.வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.