tamilnadu

img

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்,  பம்பரம் சின்னம் கோரி மதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு, தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.