எம்பிபிஎஸ் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருவதை ஆராய அரசு ஆணையம் அமைத்துள்ளது, வரவேற்கத்தக்க, அவசியமானதொரு முயற்சி!
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இதில் சேர்ப்பதே நீதி. ஏழை, எளிய குடும்பப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற அரசின் நல்ல நோக்கம் அப்போதுதான் முழுமைபெறும். இந்த முயற்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
நீட்டில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்குபெறும் முயற்சி கைவிடப்படுகிறதா என்பதை அரசு விளக்க வேண்டும்.
இதுபோலவே கடந்த காலங்களில், கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை நினைவில் கொண்டு, நீதிமன்றத்தில் எல்லா வகையிலும் செல்லத்தக்க சட்ட மசோதாவை ஓட்டைகளின்றியும் காரண காரியங்களை விளக்கியும் நிறைவேற்றுவதும், உச்ச நீதிமன்றத்தில் தக்காரைக் கொண்டு வாதாடி நிலைநிறுத்துவதும் அவசியம்.