சென்னை, ஜுன் 17- தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் 5,486 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக விவரம் வருமாறு:- தண்டையார்பேட்டை - 4370; தேனாம்பேட்டை- 4143; கோடம்பாக்கம்- 3648; அண்ணாநகர்- 3431; திருவிக நகர்- 3041; வளசரவாக்கம்- 1444; திருவொற்றியூர்-1258; அம்பத்தூர் -1190; அடையாறு - 1931; மாதவரம்- 922; பெருங்குடி- 646; சோழிங்கநல்லூர்- 639; ஆலந்தூர்- 699 சென்னையில் கொரோனாவிலிருந்து 18,565 பேர் குணமான நிலையில், 422 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 60.09 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர், 39.9 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.