சென்னை, ஆக. 31 - பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை வர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கரு தப்படும் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா மற்றும் புதூர் அப்பு வை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர். இதனிடையே, புதூர் அப்புவின் கூட்டாளியான மாட்டு ராஜாவை, பெங்களூருவில் வைத்து, தனிப்படைப் போலீசார் கைது செய்துள் ளனர். மேலும், மாட்டு ராஜாவை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய பட்டினம் பாக்கம் போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
4 பேரின் வழக்கறிஞர் தொழிலுக்குத் தடை
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்க ளில் வண்ணாரப்பேட்டை கே. ஹரிஹரன், கடம்பத்தூர் கே. ஹரிதரன், மணலி சிவா, வியாசர்பாடி அஸ்வத்தாமன் ஆகிய நான்கு பேரும், அவர்கள் மீதான வழக்கு முடியும் வரை, வழக்கறிஞர் தொழில் செய் வதற்குத் தடை விதித்து தமிழ்நாடு, புதுச் சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.