சென்னை, ஜன.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே. நகர் பகுதிக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளருமான தவமணி திங்களன்று (ஜன.21) நள்ளி ரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. வடசென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த வரும் மூத்த தொழிற் சங்கவாதி வரதன் மற்றும் மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான கோவிந்தம்மாள் இவர்களின் ஒரே வாரிசு எஸ்.தவமணி ஆவார். அவருக்கு சுப்பிரமணி என்ற கணவரும், 14 வயதில் மோகனா கிருஷ்ணன் என்கிற மகனும் உள்ளனர். தனது தந்தையை வரதன் மறைவுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்க பணியில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்திக் கொண்டு சங்கப் பணியாற்றினார். வ.உ.சி நகர் சேனியம்மன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.கே. சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், ஆர். ஜெயராமன், ஆர்.லோக நாதன், வி.ஜானகிராமன், எஸ்.ராணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், நிர்வாகிகள் மற்றும் ஆர்.கே.நகர் பொது மக்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 4 மணி அளவில் தவமணியின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு காசிமேடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தவமணியை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநிலக்குழுவும், மாவட்டக் குழுவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.