சென்னை, ஜூன் 21 - பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க கோரி தென்சென்னையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய 3 நாள் பிரச்சாரம் நிறைவடைந்தது. குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக ஜூன் 18ந் தேதி ஆலந்தூர் பகுதி நங்கநல்லூரில் பிரச்சாரம் தொடங்கியது.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்லா வரம், தாம்பரம் பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் நடைபெற்ற பிரச்சாரம் நடைபெற்றது.
குழந்தைகள் பாதிக்கப்படும் போது, குடும்பம், சமூகம் செய்ய வேண்டிய வைகளை பட்டியலிட்டும், அரசு மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை களை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்த னர். மதுரவாயல் பகுதி அயப்பாக்கத்தில் வியாழனன்று (ஜூன் 20) பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில பொருளாளர் பிரமிளா, மாவட்டத் தலைவர் எஸ்.சரணவசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், துணைத்தலைவர் எஸ்.பிச்சையம்மாள், எம்.சரஸ்வதி எம்சி, மதுரவாயல் பகுதி நிர்வாகிகள் கவிதா, விஜயலட்சுமி, ஷகிலா உள்ளிட்டோர் பேசினர்.