tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திருவள்ளூர், ஏப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளருமான இ.எழிலரசன் அவர்களின் தாயார் ஏசம்மாள் காலமானார். அவருக்கு வயது 75,ஊத்துக்கோட்டை அருகில் உள்ள காக்கவாக்கம் கிராமத்தில் வசித்து வந்த எழிலரசனின் தாயார் ஏசம்மாள் ஞாயிறன்று (ஏப்.14) அதிகாலை காலமானர். அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி ஆர்.தமிழரசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சாந்திமாரிமுத்து உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த ஏசம்மாள் சொந்த ஊரான காக்கவாக்கத்தில் இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

;