tamilnadu

img

புயலின் கோரத் தாண்டவம்....

கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல் சேகரிக்கும் மிதவை தேசிய கடல்  துறைமுக நங்கூரத்திலிருந்து விலகி மெரினா கடற்கரையோரம் ஒதுங்கியது.

 தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆனந்தன் தெரு அருகே வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரம் சரிந்து விழுந்தது.

எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் மீது ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.

புயலின் சீற்றம் காரணமாக மகாபலிபுரம் தேவநேரி பகுதியில் சாலை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது.

ஜிஎஸ்டி சாலை - கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை வெள்ளத்தால் மூழ்கியது.

சென்னை மாநகராட்சி 123 வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் எம்.சரஸ்வதி முறிந்த மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.

மாண்டஸ் புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு 4ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உணவு வழங்கினார். இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், பகுதிச் செயலாளர் கதிர்வேல், வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் ராஜ்குமார்,விவேக் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.