நாட்டில் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பில் ஈடு பட்டுள்ள நிறுவனங்கள் ஏராளமாக மூடுவிழா கண்டு வருகின்றன. பொருளாதார வளர்ச்சி பற்றி மோடி அரசு மேற்கொள்ளும் வெற்றுப் பேச்சுக்களை நிரா கரிக்கும் வகையில் உற்பத்தி துறையில் வீழ்ச்சி அதிகரித்துள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் வரி செலுத்துபவர்கள் பட்டியலிலிருந்து 40ஆயிரம் உற்பத்தி நிறுவனங்கள் காணாமல் போய் உள்ளன. இது, தொழில் நிலைத்தன்மையும் வளர்ச்சியும் எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை தெளி வாகக் காட்டுகிறது. தொழில்களை தொடர்ந்து தக்க வைப்பதில் மோடி அரசு அப்பட்டமாக தோல்வி அடைந் துள்ளது என்பதையே, வரி செலுத்துபவர்களில் 5% வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, தொழில்களை மீட்க முயற்சி மேற்கொள்வதாக அரசு கூறி வந்தாலும் பொருளாதாரத்தில் தொழில் நிறுவனங் களின் லாபப் பங்கு என்பது குறைந்து வருகிறது. ஒரு புறத்தில் பெரும் கார்ப்பரேட்டுகள் வலுவான லாபத்தை ஈட்டுகிற நிலையில் கார்ப்பரேட்டுகள் அல்லாத தொழில் நிறுவனங்கள் பலத்த அடிவாங்கியுள்ளன. மோடி அரசு பதில் என்ன?