tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மாஞ்சா நூல் விற்பனை:  போலீஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 31- திருவொற்றியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 187 காற்றாடிகள் மற்றும் 72 மாஞ்சா நூல் கண்டு கள் மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. காலடிப்பேட்டை வஉசி 1வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தடை செய்யப்பட்ட காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் அதை தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அருண் குமார் என்பவரை கைது செய்தனர்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ தகவல்

சென்னை, மார்ச் 31- சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடை முறை கள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்கு கிறது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடை பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன் சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டங்களை https://cbseacademic.nic.in/curriculum-2026.html என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

கள்ளநோட்டு அச்சிட்டவர் நீக்கம்  

சென்னை, மார்ச் 31- கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ள நோட்டுகள் அச்சடித்த உள்ளனர். காவல்துறை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கி ருந்து ரூ.85ஆயிரம்  கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கி கள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுண்டிங் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறை வான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.இந்நிலையில் வி.சி.க. கட லூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.