tamilnadu

img

சென்னையில் நவ.15 முதல் 24 வரை மலேசிய உணவுத் திருவிழா

சென்னை, நவ.15- சென்னை, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மலேசிய உணவின் உண்மையான சுவையை சென்னை மக்களுக்கு கொடுக்கும் விதமாக இந்த உணவுத் திருவிழா ரெயின்ட்ரீ ஓட்டலின் சாப் சாய் உணவகத்தில் நடைபெற உள்ளது.  இதில் மலேசிய உணவு வகைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சிறந்த சமையல்கலை நிபுணரான மேட் சபீ பின் ஹாரூன் கலந்து கொள்கிறார்.  மலேசிய உணவு வகைகளில் இந்திய, சீன மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மூலிகை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்த உணவு வகைகள் மிகுந்த சுவையுடன் காரசாரமாக இருக்கிறது.  இந்த உணவுத் திருவிழாவில், பசியை தூண்டக்கூடிய சடே அயாம் (மலேசிய குழம்பு, சிக்கன் சுப்ரீம், தேங்காய் பால், எலுமிச்சை புல், வேர்க்கடலை சாஸ்),  கேதும்பர் அயாம் (கொத்தமல்லி, புதிய மிளகு சோளம், பூண்டு, சிப்பி சாஸ்), இகான் மசக் மேரா (டிலாபியா மீன், பெலகன் பேஸ்ட், மிளகாய், தக்காளி கூழ்),  சம்பல் `ஹிஜாவ் பெட்டாய் உதாங் பைலிங் மென்யங்கட் (இறால், பச்சை மிளகாய், எலுமிச்சை புல்) ஆகியவை இடம் பெறுகின்றன.