tamilnadu

நாகர்கோவில் ,திருவில்லிபுத்தூர் ,வேலூர் முக்கிய செய்திகள்

முகநூல் பதிவை பகிர்ந்தவர் கைது: சிபிஎம் கண்டனம்

நாகர்கோவில், அக். 8- முகநூல் பதிவு ஒன்றை பகிர்ந்ததற்காகவும், 2018 ஆம்  ஆண்டில் நீக்கப்பட்ட ஒரு பதிவை காரணம் காட்டியும் சிபிஎம் கிளை செயலாளர் ஜெயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவரை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:  படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஜெயன் என்பவர் அந்த  பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாள ராகவும், சிஐடியுவின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளராகவும் பல  ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இவர் மத்திய அரசின்  மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பல போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவற்றை முகநூலில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் முக நூலில் வந்த ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதோடு இவர் கடந்த  2018 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த ஒன்றை அவர் நீக்கிய பிற கும், அதை பதிவிறக்கம் செய்து அதையும் காரணம் காட்டி  காவல் நிலையத்தில் பாஜகவினர் இவருக்கு எதிராக புகார்  அளித்தனர். இந்த பொய்ப்புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர  முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜெயனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  ஏற்கனவே ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மக்களை மதரீதி யாக பிளவுபடுத்தும் வகையில் தொடர்ந்து வன்முறை பேச்சுக்களையும், ஆபாச கருத்துக்களையும் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் சமூக  வலைத்தளங்களில் ஆபாசமாகவும், மக்களை பிளவு படுத்தும் வகையிலும் வன்முறை கருத்துக்களை பதிவு செய்  யும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட காவல் துறை, மக்கள் பிரச்சனை களுக்காகவும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை முகநூலில் கண்டித்தும் பதிவு செய்து வரும் ஜெயனை  கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என அதில் கூறப்  பட்டுள்ளது.

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு 

திருவில்லிபுத்தூர், அக்.6- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது எஸ் ராமச்சந்திரா புரம். அங்குள்ள தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த அய்ய னார்  மகன் தங்கராஜ் (20). இவர் மதுரையிலுள்ள தனியார்  பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.  சனிக்கிழமை மாலை வரை வீட்டிலிருந்தவர் திடீரென மாய மானார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த நிலையில், திருவில்லி புத்தூர் தைலாகுளம் தண்டவாளத்தில் ரயில் அடிபட்டு வாலி பர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்  தொடர்ந்து அங்குசென்ற ரயில்வே காவல்துறையினர்  அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி னர். அப்போது அவர் தெற்குத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ்  என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை உடற்  கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூரில் 249 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூர்,அக்.8- வேலூர் மாவட்டத்தில் இரு மாதங்களில் 240 பேருக்கு  டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்து சிகிச்சை அளிக்  கப்பட்டு வருவதாக தமிழக  அரசின் சுகாதாரத்துறை கூடு தல் இயக்குநர் சோமசுந்தரம்  தெரிவித்தார். அரக்கோணம் நகராட்சி யின் 36 வார்டுகளில் இந்திய  மருத்துவம் மற்றும் ஓமியோ பதி மருத்துவத்துறை மூலம் ஒட்டு மொத்த டெங்கு ஒழிப்பு  விழிப்புணர்வு பணி நடை பெற்றது. இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்ட சுகாதாரத்  துறை துணை இயக்குநர் கே. எஸ்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார், தமிழக சுகாதாரத்  துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம் பணியினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், “தமிழ கம் முழுவதும் டெங்கு கொசு  ஒழிப்பு விழிப்புணர்வு பணி கள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது” என்றார். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 145 பேருக்  கும், தற்போது 95 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது  கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட் டுள்ளனர். இதில் மாவட்டத்தி லேயே அதிகமாக அரக்கோ ணத்தில் கடந்த மாதத்தில் 18  பேருக்கும் இந்த மாதம் 4  பேருக்கும் டெங்கு காய்ச்சல்  இருப்பது தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.