தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் வசதி
தமிழ்நாட்டில் 22 இடங்களில் ரோப் கார் வசதி சென்னை, நவ. 5- நாடு முழுவதும் 18 இடங்களில் 90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என சமீபத்தில் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 இடங்க ளில் ரோப் கார் வசதி செயல்படுத் தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த வும், வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகை யிலும் தமிழ்நாட்டில் உள்ள பிரபல மான சுற்றுலாத் தளங்களில் இந்த வசதி செய்துதரப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 22 இடங்க ளில் ரோப் கார் வசதி ஏற்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, நீலகிரி, சேலம், திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திண்டுக்கல், தென் காசி, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகருக்கும், பழனி முதல் கொடைக்கானல் வரை யும், ஊட்டி முதல் பைக்காரா வரை யும், குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையும், மேலும் கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம், திருச்சி மலைக் கோட்டை, கொடைக்கானல் ஸ்டார் ஏரி, சதுரகிரி, திருமலை கோவில், பர்வத மலை, அகத்தியர் அருவி, திருச்செங் கோடு, திருநீர்மலை, திருக்கழுகுன்றம், திருத்தணி உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, நவ.5- தமிழகத்தில் மணல் கொள்ளையை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டு க்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அருகில் சின்ன தோட்டா ளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்ப வரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் அணைக் கட்டு பகுதியில் பெண்ணையாற்றி லிருந்து மணல் கொள்ளையடிக்கப் படுவதை படம் பிடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், சமூக ஆர்வலரு மான உமாபதி என்பவரை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளது. ஒரே மாவட்டத் தில், ஒரே இரவில் நிகழ்ந்துள்ள இரு தாக்குதல்களும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளன. இயற்கை வளங்களை பாது காக்க முயலும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் தாக்கு தல்கள் அதிகரித்திருப்பது கண்டிக் கத்தக்கது.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலு வலர் சேகர் என்பவர் இரு நாட்க ளுக்கு முன் தாக்கப்பட்டார். திண்டுக் கல் மாவட்டம் ஆயக்குடி பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் மணல் கொள்ளையை தடுத்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை ஊர்திகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது.
ஆற்று மணல், சவுடு மண் என அனைத்து வகையான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படு வதை தடுக்கவேண்டியது அரசின் கடமை அதை உணர்ந்து மணல் கொள் ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வெங்காயத்தின் விலை குறைகிறது
சென்னை,நவ.5- கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயம்வரத்து அதிகரித் துள்ளதால் விலைகுறைந்துள்ளது.
ஞாயிறன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து தொடர்ந்து ஏறுமுக மாகவே இருந்து வந்த பெரிய வெங்கா யத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.
மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப் படுகிறது. வெளிச் சந்தையில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரையிலும் விற்பனை யாகி வருகிறது.