சென்னை, மார்ச் 3- டெல்டா மாவட்ட மக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் வகையில் நாகப் பட்டினத்தில் ரூ. 254.80 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரசு மருத்துவமனை யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று (மார்ச் 4) திறந்துவைக்கிறார்.
சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 3) செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், நாகப்பட்டினத்தில் அரசு மருத்து வக்கல்லூரியை 2022 ஆம் ஆண்டு ஜன வரி மாதம் முதலமைச்சர் முன்னிலையில் பிரதமர் திறந்துவைத்தார். தற்போது அந்த மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச் சர் மயிலாடுதுறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார் என்றார்.
மருத்துவ கட்டமைப்புகள்
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை யும், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.4.32 கோடி மதிப்பீட்டிலும் நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டமைப்புகளையும், குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட் டில் மருத்துவமனை கட்டமைப்புகளை யும் முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.87 கோடி மதிப்பீட்டிலான ஆவடி, அம்மாபேட்டை, கண்டியப்பேர் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ கட்ட மைப்புகளை விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனை
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.125 கோடி மதிப்பிலான மருத்துவ கட்ட மைப்புகளையும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.162 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டிடங்களையும், கோவை மருத்துவமனைக்கு ரூ.122 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டிடங்களையும், அவர் திறந்து வைக்க உள்ளார். ஜப்பான் பன்னாட்டு கூட்டு றவு வங்கி நிதியுதவியுடன் ரூ.1634 கோடி மதிப்பீட்டில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ மனை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.