tamilnadu

img

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் பணத்தை இழந்து 35-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.