சென்னை, ஜூன் 29-
உலகளாவிய புதுமை மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக
திகழும் விவோ நிறுவனம் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் தனது டி மாடல் வரிசையில் புதிய டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறந்த செயல்திறனைத் தேடும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் இரண்டு 5ஜி சிம் கார்டு களை பயன்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பிரிவில் ஒப்பிடமுடியாத வேகத்தையும் செயல்திறனை யும் இது கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் கூறி யுள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இதன் விலை ரூ.10,499 ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் ரூ.11,499 ரூபாய்க்கு இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேர்ந்தவர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டத்தில் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நுழைகின்ற முதல் தலைமுறை பழங்குடியின இன 11 மாணவர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விடுதியில் தங்கி படிப்பதற்கான உபகரணங்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளுர் சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.