tamilnadu

img

தமிழ்நாட்டிற்குள் வருமா வெட்டுக் கிளிகள்?

சென்னை:
பாலைவன வெட்டுக் கிளிகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பாலைவன வெட்டுக்கிளிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ”வடமாநிலங் களை தற்போது தாக்கி வரும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக் கிளிகள். இந்த வெட்டுக் கிளிகளின் தாக்குதல் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ் தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது” என்றார்.இந்த வெட்டுக்கிளிகள் தமிழ் நாட்டிற்கு வருமா என்பது குறித்து மத்திய அரசு தெளிவான விளக் கத்தை நமக்கு அளித்துள்ளது என்றும் பாலைவன வெட்டுக் கிளிகள் கூட்டம் கூட்டமாக பிகார் போன்ற தெற்கிந்திய பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வந்தவை, உள் ளூர் வெட்டுக் கிளிகள்தான் என்று தெரியவந்துள்ளது.தமிழ்நாட்டில் வெட்டுக்கிளிகள் ஊடுருவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தீயணைப்புத்துறை, வேளாண் துறை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரி கூறினார்.ஒருவேளை வெட்டுக்கிளிகள் இங்கு வந்தால் கூட அவற்றை அழிக்கத் தேவையான கிருமி நாசினி உள்ளிட்ட மருந்துகளும், இருப்பில் வைத்திருப்பதாகவும் ககன் சிங் பேடி தெரிவித்தார்.

;